video


recent scroll

news

blowup

carousel

top bar content

+++Your Text Here...+++
(X)  

Recent Posts

dailyvideo

பயிரிடமிருந்து பாதுகாப்பு கேட்கிறது வேலி.

பயிரிடமிருந்து பாதுகாப்பு கேட்கிறது வேலி.

அன்பானவர்களே,
பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுப்பதற்காக பல்வேறு சட்டங்கள் நம்நாட்டில் இயற்றப்பட்டுள்ளது. அதையும் தாண்டி பெண்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக குரல் எழுப்ப பல்வேறு பரிமாணங்களில் மாதர் சங்கங்களும், ஏனைய பெண்ணுரிமை அமைப்புகளும் நிறையவே இருக்கின்றது. இருப்பினும், பெண்கள்மீதான பாலியல்கொடுமைகள் ,வரதட்சனைக்கொடுமைகள், அதையொட்டிய தற்கொலைகள் நாட்டில் குறைந்ததற்கான அறிகுறியைக்கானவில்லை.
இப்போது,பெண்களால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம் என்றுகூறி 'ஆண்கள் பாதுகாப்புச்சங்கம்' என்ற பெயில் சங்கம் உருவாகியுள்ளதாகவும் அச்சங்கத்தின் சார்பாக,வரும் டிசம்பர் ஆறு அன்று போராட்டம் நடைபெற உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இதைபடிக்கும்போது வியப்பாக இருக்கிறது ஏனெனில்,பாதுகாப்பளிக்க வேண்டியவர்களே பாதுகாப்பு தேடுவதுதான்.சமீபத்தில் இவர்கள் சென்னை மாநகர கமிஷனரை சந்தித்து மனு ஒன்றையும் அளித்துள்ளார்கள். அவர்களில் ஒருவர் செய்தியாளரிடம் ;என் மனைவி கூலிப்படையை ஏவி என்னைத்தாக்கினார் என்கிறார்.

மற்றொருவர் ;நான் என்மனைவியை அடித்ததால் கோபமுற்ற அவள் காவல்நிலையம் சென்று,என்மீதும்,எந்தாய் மற்றும், என்தங்கை மீது நாங்கள் வரதட்சனை கேட்டுதுன்புறுத்துவதாக புகார்கூற காவல்துறை எங்களை அள்ளிச்சென்றது பின்பு நாங்கள் விடுவிக்கப்பட்டாலும் இது எண்கள் மனதை பெரிதும் பாதித்துவிட்டது.என்கிறார்.

அன்பர்களே,ஒருபுறம் கணவனால் மனைவி பாதிக்கப்படுவதும்,மறுபுறம் மனைவியால் கணவன் பாதிக்கப்படுவதும் எதனால் என்று சிந்தித்தால் அவர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல் இல்லாததுதான். கணவன் மனைவிக்குள் பிரச்சினை வரும்போது பெரியவர்கள் சொல்லும் அறிவுரைகள் பெரும்பாலும் மதிக்கப்படுவதில்லை.. ஆனால்,இஸ்லாத்தில் வாழ்க்கையும் வணக்கமாக சொல்லப்பட்டுள்ள காரணத்தால் பெரும்பாலும் முஸ்லீம் தம்பதிகளிடம் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதில்லை.அப்படியும் சில முஸ்லீம் தம்பதிகளிடம் ஏற்ப்படுமாயின், அவர்கள் மார்க்கத்தை விளங்காதவர்ஆகத்தான் இருப்பார்கள்.

இப்போது வல்லோன் வகுத்துத்தந்த வாழ்க்கை திட்டத்தை பாருங்கள்;
பெண்களை அவர்களின் அழகுக்காக மணமுடிக்காதீர்கள்; அவர்களின் அழகு அவர்களை அழித்துவிடலாம்; அவர்களின் செல்வத்திற்காக மணமுடிக்காதீர்கள்; அவர்களின் செல்வம் அவர்களை தவறச் செய்திடலாம்; நல்லொழுக்கத்திற்காக அவர்களை மணமுடியுங்கள்; நல்லொழுக்கமுள்ள அழகற்ற கருநிறத்து அடிமைப்பெண் (தீய ஒழுக்கமுள்ள பெண்ணைவிட) மேலானவள் என நபி(ஸல்) அவர்கள் விளக்கினார்கள். (அறிவிப்பு: இப்னு அம்ர்(ரழி) நூல்: இப்னு ஹிப்பான், அஹ்மத்)
பெண்ணை தேர்ந்தெடுக்கும்போதே, அழகாக இருக்கிறாளா? காசு பணத்தை அள்ளி தருவாளாஎன்று பாராமல் நல்ல ஒழுக்கமுள்ள பெண்ணாக தேர்ந்தெடுத்திருந்தால் வடிவேலு மாதிரி[படத்தில்தான்] அடிவாங்குற நிலைமை வருமா
பெண்களுக்கு அவர்களின் மகர்கொடைகளை மனமுவந்து கொடுத்து விடுங்கள்.[அல்-குரான்]
கல்யாணம் செய்யும் போது அவளிடம் கையேந்தாமல் நீ கொடுத்திருந்தால் உன்மீது வரதட்சனை தடுப்பு பிரிவில் கேஸ் போடமுடியுமா ?
ஆண்கள் தமது செல்வங்களை செலவிடுகிறார்கள் என்பதாலும்,ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். [அல்-குரான்]

மனைவியை வேலைக்கு அனுப்பாமல் நீங்கள் சம்பாதித்து குடும்பத்தை நிர்வாகம் செய்திருந்தால் அவள் உன்னை மிஞ்ச முடியுமா..?
அவர்கள்[மனைவியர்]உங்களுக்கு ஆடை;நீங்கள் அவர்களுக்கு ஆடை.[அல்குரான்]
ஆடை எப்படி மானத்தை காக்குமோ அதுபோல் கணவனும் மனைவியும் ஒருவர் மானத்தை ஒருவர் காக்கவேண்டுமென நினைத்திருந்தால் மானத்தை கப்பலேர்ற காவல்நிலைய படி ஏறுவார்களா..? பிணக்கு ஏற்ப்படும் என்று[மனைவியர்விசயத்தில்] அஞ்சினால் மனைவியருக்கு அறிவுரை கூறுங்கள். படுக்கையிலிருந்து ஒதுக்குங்கள்.அவர்களை [லேசாக] அடியுங்கள்[அல்குரான்]

.
ந்த வழியை கையாண்டால் எந்த மனைவியும் வழிக்கு வந்துவிடுவார்கள். அப்படியே வழிக்கு வராமல் விவாகரத்து பண்ணிவிட்டால் கூட ,
[விவாகரத்து செய்துகொண்ட தம்பதியர்]இருவரும் இணக்கத்தை விரும்பினால் மூன்று மாதவிடாய் காலத்திற்குள் மீண்டும்[ திருமணமின்றி ]சேர்ந்து கொள்ளலாம்.
இவ்வாறு விவாகரத்து செய்தல் இரண்டுதடவைகளே, [இதன்பிறகு] நல்லமுரையில் சேர்ந்து வாழலாம் அல்லது அழகான முறையில் விட்டுவிடலாம்.[அல்குரான்]
இவ்வளவு எளிமையான அழகான சட்டத்தை
அனைவரும் கடைபிடித்தால், அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் தேவையில்லை. ஆளுக்கொரு சங்கங்களும் தேவையில்லை. ஆர்ப்பாட்டங்களும் தேவையில்லை.



இடுகையிட்டது நிழல்களும் நிஜங்களும்.




.

__,_._,___

Posted by Unknown on 11/26/2008 08:50:00 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for பயிரிடமிருந்து பாதுகாப்பு கேட்கிறது வேலி.

Leave comment

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!

Recent Entries

Recent Comments

Photo Gallery