சிந்தீப்பீர்.....
ஒரு காலத்தில் நமது ஊர் பெண்கள் கிணற்றில் தண்ணிர் எடுத்து தனது தேவைகளை நிறைவேற்றி கொண்டனர். ஆதலால் நோய் நொடி இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்தனர். ஆனால் இபொழது நிலமை தலைகீழாக இருக்கிறது.இருந்த இடத்தில் இருந்து கொண்டு வேளை ஏதும் செய்யாமல் தேவைகளை பூர்த்தி செய்வதால் பெயர் தெரியாத வியாதிகளெல்லாம் வந்துவிட்டன.
நமது ஊரின் இன்றய நிலமை என்ன என்று பார்த்தால் ஊரே தண்ணீரில் மிதக்கிறது ஆனால் நமது தேவைகளை நிறைவேற்றி கொள்ள தண்ணிர் இல்லை காரணம் கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் வினியோகம் இல்லாத காரணத்தினால் நமது மக்கள் மிகுந்த சிரமத்து ஆளாகி இருக்கின்றனர்.
இப்பொழது ஊரில் தண்ணீர் டேங் நிறைத்துக்கொள்ள ஜெனேரேட்டர் வடாகை 250/= இதையெல்லாம் நாம் கருத்தில் கொண்டு காலங்கள் மாறினாலும் நாம் நம்து மூதாதையர்கள் காட்டித்தந்த வாழ்க்கை முறையை கடைபிடித்தால் இந்த மாதிரி பிரச்சினை வராமல் பார்த்து கொள்ளாலாம். நமது ஊர் மக்கள் இனியாவது சிந்திப்பார்களா............
ஹபீப் ரஹ்மான் - ஜித்தா
