குளங்கள் நிரம்பின.
சமீபத்தில் பெய்த அடை மழையால்...
* நம் ஊரில் உள்ள அனைத்துக்குளங்களும் நிரம்பி வழிகின்றன.
* பிலால் நகர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
* பல தெருக்களில் உள்ள வீடுகளின் சுவர்கள் இடிந்துள்ளது.
* பேருந்து நிலைய சாலை கடுமையாக சேதம் அடைந்துள்ளது.
* தெருக்களை இணைக்கும் கால்வாய் பாலங்களில் உள்ள மேல் தளத்தில் உடைப்பு ஏற்பட்டு பெரும் ஒட்டை ஏற்பட்டுள்ளது.
* பல தெருக்களில் ஏற்கனவே போதிய சாலை வசதி இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
* பேருந்து நிலையம் செல்லியம்மன் கோவில் அருகே உள்ள குளம் நிரம்பி வழிவதால் அதன் அருகாமையில் உள்ள சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது, இதனால் அவ்வழியே செல்பவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். இந்த சாலை பேருந்து நிலையத்தை இணைக்கும் முக்கிய சாலை என்பது குறிப்பிடத்தக்கது.
* புதிதாக அமைத்த ECR (முத்துப்பேட்டைக்கு செல்லும் வழியே உள்ள) சாலையில் அரிப்பு ஏற்படுள்ளது.
* காய்கறிகள், கோழி மற்றும் ஆட்டுக்கறியின் விலை கடுமையாக உயர்ந்து தற்பொழுது இறங்க துவங்கியுள்ளது.
* வழக்கம் போல் மின்வெட்டு உள்ளது.
* இலங்கைக்கும் தமிழகக்கடற்கைரைக்குமிடையே அவ்வப்பொழுது உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் திடீர் திடீரென்று மழை கடந்த ஒரு மாதமாக நமதூரில் பெய்து வருகிறது.
-Abdul Barakath.
