video


recent scroll

news

blowup

carousel

top bar content

+++Your Text Here...+++
(X)  

Recent Posts

dailyvideo

குளங்கள் நிரம்பின.

சமீபத்தில் பெய்த அடை மழையால்...

* நம் ஊரில் உள்ள அனைத்துக்குளங்களும் நிரம்பி வழிகின்றன.

* பிலால் நகர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

* பல தெருக்களில் உள்ள வீடுகளின் சுவர்கள் இடிந்துள்ளது.

* பேருந்து நிலைய சாலை கடுமையாக சேதம் அடைந்துள்ளது.

* தெருக்களை இணைக்கும் கால்வாய் பாலங்களில் உள்ள மேல் தளத்தில் உடைப்பு ஏற்பட்டு பெரும் ஒட்டை ஏற்பட்டுள்ளது.

* பல தெருக்களில் ஏற்கனவே போதிய சாலை வசதி இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

* பேருந்து நிலையம் செல்லியம்மன் கோவில் அருகே உள்ள குளம் நிரம்பி வழிவதால் அதன் அருகாமையில் உள்ள சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது, இதனால் அவ்வழியே செல்பவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். இந்த சாலை பேருந்து நிலையத்தை இணைக்கும் முக்கிய சாலை என்பது குறிப்பிடத்தக்கது.

* புதிதாக அமைத்த ECR (முத்துப்பேட்டைக்கு செல்லும் வழியே உள்ள) சாலையில் அரிப்பு ஏற்படுள்ளது.

* காய்கறிகள், கோழி மற்றும் ஆட்டுக்கறியின் விலை கடுமையாக உயர்ந்து தற்பொழுது இறங்க துவங்கியுள்ளது.

* வழக்கம் போல் மின்வெட்டு உள்ளது.


* இலங்கைக்கும் தமிழகக்கடற்கைரைக்குமிடையே அவ்வப்பொழுது உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் திடீர் திடீரென்று மழை கடந்த ஒரு மாதமாக நமதூரில் பெய்து வருகிறது.

-Abdul Barakath.

Posted by வளர்பிறை on 12/18/2008 06:39:00 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for குளங்கள் நிரம்பின.

Leave comment

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!

Recent Entries

Recent Comments

Photo Gallery