தியாகத் திருநாள் கொண்டாட்டம்
ஜித்தாவில் உள்ள அதிரை வாசிகள் அனைவரும் ஹஜ்ஜீப் பெருநாள் தொழுகையை கடற்கரை அருகில் உள்ள ஹானி பள்ளியில் தொழுது விட்டு காலை உணவை (பெருநாள் பசியாற) பள்ளி வராண்டாவில் முடித்த காட்சி நமது ஊரில் கல்யாண வீட்டில் மாப்பிளை சகனில் சாப்பிடுவது போல இருந்தது. ஒவ்வொரு வரும் அவரவர் தயார் செய்த பதார்த்தங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர்.
பிறகு பகல் உணவுக்கு சகோதரர்கள் ஜெய்லானி, ஹனிபா, அஜ்வா நெய்னா, ராஃபியா, ரபீக் ஆகியோர் தலைமையில் ஆடு அறுத்து கொண்டுவந்து பெரிய மந்தி சாப்பாடு (PPT) சிறப்பாக நடைப்பெற்றது. அது சமயம் ஜித்தாவில் உள்ள அழைக்கப்பட்ட அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
