செவிட்டில் அறைந்தார் போல்,நாலு கேள்வி???
மக்கிப்போக உள்ள மாய உலகின் அலங்காரங்களால் சிக்குண்டு கிடக்கும் நம் சமுதாயத்தோரே 1400 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியத்தை எடுத்துறைத்து நடைமுறைபடுத்திகாட்டிய நம் உயிரிலும் மேலான முஹம்மது (ஸல்) அவர்கள் இவ்வுலகம் ஈமான்கொண்டோருக்கு சிறைச்சாலையும், இறை மறுப்பாளர்களுக்கு சுவனப்பூஞ்சோலையுமாகும் என்று சூளுரைத்த சொல் இன்னும் ஏன் நம் சமுதாயத்தினரின் செவியில் விழாமல் உள்ளது.
தாந்தோன்றித்தனமாகவும் மனம்போனபோக்கிலும் நம் ஷரீஅத்தில் தடுக்கப்பட்ட விஷயங்களை செய்துவிட்டு காலம் செய்த கோலம் என்று காலத்தை குறைகூறுவது எவ்விதத்தில் சரியாகும். இப்படி ஒரு சொல் வருமென்பதினாலோ என்னவோ அன்றே பெருமனார் (ஸல்) அவர்கள் எவ்வித்தத்திலும் காலத்தை குறை கூறவேண்டாம் என்று எச்சரித்துவிட்டார்க்ள்.
இன்று ஷரீ அத்தில் அனுமதியில்லா விஷயங்களை தன் குடும்பத்தின் பேரும்,புகழும்தரம்தாழ்ந்துவிடக்கூடாதுஎன்பதற்க்காகவும்,முகஸ்துதிக்காகவும் ஆடம்பரத்தையும் அனாச்சாரத்தையும் தவரு என்று அரிந்திருந்தும் செய்துவிட்டு தவரை சரிசெய்ய முனைவோர் இனியாவது அத்தகைய தவறுகளை தொடறாமலிருக்கவும் அத்தகைய தவறுகள் என்னிலையிலும் குறிப்பாக என்னோடும் நம் சமுதாயத்தோடும் கலந்துவிடாமல் அல்லாஹ் நம்மை பதுகாத்தருள்வானாக-ஆமீன்
இன்ஷா அல்லாஹ் எளிமையாக நடைபெறவேன்டிய சுன்னத்தான விஷயங்களில் தேவையற்ற விஷயங்களை கூடுதலாக்கி தனக்குதானே வேலைபளுவை அதிகரித்து ஈமானையே பரிகொடுக்க செய்யும் விஷயங்களை சுட்டிகாட்டி ஒரும்போதும் அத்தகைய தவறு என் வாழ்விலும் இதைபடிப்போர் வாழ்விலும் நிகாழாமல் அல்லாஹ் அருள்பாளிப்பானாக - ஆமீன்.
A.H.அப்துர் ரஷீத் ஆலிம்
