AYDA-Jeddah வின் மாதாந்திர கூட்டம்
Adirai Youth development Association - AYDA-Jeddah வின் மாதாந்திர கூட்டம் 09- 01- 2009 அன்று வெள்ளி மாலை 5 மணியளவில் சகோதரர் தமீம் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
அது சமயம் ஊர் நடப்புகள், சென்னையில் நடைப்பெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாடு, காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைகள் மற்றும் இலங்கை பிரச்சினை பற்றி ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் அய்டாவின் புதிய பொறுப்புதாரிகளை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடைபெற்றது. அது சமயம் தலைவர் ரஃபி அகமது கேட்டுகொண்டதின் படி மூத்த உறுப்பினர் பசீர் காக்கா அவர்கள் தலைமையில் தேர்தல் நடைப்பெற்றது. அதிகப்படியான வாக்குகள் பெற்று பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
தலைவர்: M. ரஃபியா
துணைத்தலைவர்: ஹாஜி M. முகைதீன்
செயலாளர்: A. J. தாஜீத்தீன்
துணைச்செயளாளர் S. அப்துல் காதர் - ஜெய்லானி
பொருளாளர்: H. அப்துல் அஜீஸ்
துணைப்பொருளாளர். A. ஜஃபருல்லா
பணி மூப்பு பெற்று தயாகம் திரும்ப இருக்கின்ற பசீர் காக்கா அவர்களை மூன்று மாதங்களுக்கு தலைமை ஏற்று கொள்ளுமாறு தலைவர் ரஃபி அகமது கேட்டு சம்மதம் பெற்றது அங்கத்தினர் அனைவரையும் நெக்குறச்செய்தது. பின்னர் அய்டாவின் சேவை மேன்மேலும் தொடர அனைவரின் துவாவுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
