video


recent scroll

news

blowup

carousel

top bar content

+++Your Text Here...+++
(X)  

Recent Posts

dailyvideo

சாதிகளற்ற ஒரே மார்க்கம் இஸ்லாம்.

இஸ்லாத்தை தவிர எல்லா மதங்களிலும் சாதிகளும் அதனால் சச்சரவுக்களும் ஏற்றத்தாழ்வுகளும் புரையோடிப்போய் காணப்படுகின்றன.ஆனால் சில விவரங்கெட்ட கூழ்முட்டைகள் இஸ்லாத்திலும் சாதிப்ப்ரச்சனைகள் இருப்பதுபோல் பேசுவதும் எழுதுவதும் வாடிக்கையாகிவிட்டது. இதற்க்கு அவர்கள் சில விவரங்கெட்ட விஷயங்களைக் கூறி மக்களை குழப்ப பார்க்கின்றனர்.உதாரணமாக,மரைக்காயர்,லெப்பை,ராவுத்தர் இப்படி முஸ்லிம்கள் பிரயோகிப்பதை வைத்து தவறாக எண்ணி சாதி பேதம் இஸ்லாத்திலும் உண்டு என மாயையை ஏற்படுத்த முயல்கின்றனர்.

ஆனால் அது உண்மை அல்ல என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.உதாரணமாக மரைக்காயர் என்பது வணிகம் செய்து வந்தவர்களை குறிக்கும் ஒரு வழக்காகும்.மடைக்கல ஆயர் என்பது மருவி மரைக்காயர் ஆனது.இதற்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம்?அதே போன்று குதிரை வியாபாரம் செய்து வந்தவர்களை ராவுத்தர் என அழைக்கலாயினர்.இதில் சாதி எங்கே இருக்கிறது?மார்க்க சேவை செய்வோர் லெப்பை என அழைக்கப்படலாயினர்.இதில் சாதி எங்கே உள்ளது.

மரைக்காயரும்,லெப்பை,ராவுத்தரும் ஒரே வரிசையில் நின்று தொழுவதும்,ஒரே தட்டில் உணவருந்துவதும்,சம்பந்தம் செய்து வாழ்க்கை பந்தத்தில் இணைவதும் இதற்க்கு உதாரணம்.

ஆனால்,இந்து மத சாதி பாகுபாடுதான் மக்களை இழிவு படுத்தக்கூடியது.ஆண்டான் அடிமை பேதம் காட்டக் கூடியது.பிராமணன் தலையில் பிறந்தவன்,சூத்திரன் காலில் பிறந்தவன் என சொல்லி அவனை தாழ்ந்தவன் என எட்டி மிதிக்கக் கூடியது. இந்து மத காயத்ரி மந்திரத்தை சூத்திரன் சொன்னால் ,அந்த சூத்திரனின் நாக்கை சூடு போடு,சூத்திரன் பிராமின் உடைய அடிமை என்றெல்லாம் சொல்லி பேதம் காட்டக் கூடியது.

அதே நிலையே கிறிஸ்தவத்திலும்.இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவம் நோக்கி செல்லும் மக்களிடமும் இந்து மதத்தில் என்ன சாதியில் இருந்தார்களோ அதே சாதி பெயர்தான் கிறிஸ்தவம் சென்றாலும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.உதாரணம்,வன்னிய கிறிஸ்தவர்கள்,நாடார் கிறிஸ்தவர்கள்,தலித் கிறிஸ்தவர்கள் என சொல்லிக் கொண்டு போகலாம்.மேலும் சில மாதங்கள் முன்பு நெல்லை,தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் நடந்த கிறிஸ்தவ சாதி சண்டைகளை சொல்லலாம்.

ஆகவே இஸ்லாத்தில் எள்ளளவும் அதன் முனை அளவும் சாதி இல்லை பாகுபாடு இல்லை.அப்படி இருப்பதாக கூப்பாடு போடுபவர்கள் கடைந்தெடுத்த பொய்யையும் கற்பனையையுமே பரப்பி தங்கள் மேலேயே சேரை அள்ளி பூசிக் கொள்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

அதற்கெல்லாம் அப்பாற்பட்டு உலகளாவிய அளவில் இஸ்லாம் மக்களை அரவணைத்து,படு வேகமாக பரவி வருகிறது என்பதே நிதர்சன உண்மை.

''அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்" என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் ''(அப்படியல்ல)! நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்" என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டொியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?)31:21.

Posted by இப்னு அப்துல் ரஜாக் on 7/14/2008 09:47:00 AM. Filed under , , , , , . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for சாதிகளற்ற ஒரே மார்க்கம் இஸ்லாம்.

Leave comment

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!

Recent Entries

Recent Comments

Photo Gallery