அஸ்ஸாம் மாநிலம் இனக் கலவரங்களால் அதிர்ந்து கொண்டிருக்கிறது. இருவேறு இன ஆதிவாசி மக்களிடையே மோதல். இன்னொருபக்கம் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே கலவரம். அந்த மாநிலத்தின் ஏதாவது ஒரு பகுதி எரிந்து கொண்டிருக்கிறது. சொந்த மண்ணிலேயே மக்கள் அகதிகளாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.என்ன காரணம்? நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, மாநில வட்டாரக் கட்சிகளுடன் பி.ஜே.பி. அணி அமைக்க முயற்சிக்கிறது. தவறில்லை. ஆனால், என்றோ மரித்து விட்ட இனப் பிரச்னைகளுக்கு இப்போது உயிர் கொடுக்க வேண்டுமா?
எப்போதெல்லாம் தேர்தல் கதவைத் தட்டுகிறதோ, அப்போதெல்லாம் இந்தப் பிரச்னையை பி.ஜே.பி. எரிய விடும். இப்போது அந்தத் திருப்பணியைத் தொடங்கியிருக்கிறது. பங்களாதேஷிலிருந்து குடியேறிய இஸ்லாமியர்களை அடையாளம் கண்டு அவர்களை நாடு கடத்த வேண்டும் என்று அந்தக் கட்சி கூறுகிறது. இதற்காகவே முன்னர் இயக்கம் நடத்தித் தேய்ந்து சிதறிப் போன மாநில வட்டாரக் கட்சிகளை அணி சேர்க்கிறது.
1947-ம் ஆண்டு நாடு விடுதலையடைந்த போது வங்கத்தில் ரத்த ஆறுகள் ஓடின. பங்களாதேஷ் என்று கிழக்கு வங்கம் பிரிந்து பாகிஸ்தானின் ஓர் அங்கமானது. இஸ்லாமியர்களுக்குத் தனி நாடு என்றனர். ஆனால் பிரிந்து சென்ற பங்களாதேஷில் வாழ விருப்பமின்றி ஆயிரக்கணக்கான வங்காளி இஸ்லாமியக் குடும்பங்கள் இந்தியப் பரப்பில் குடியேறின. அப்படிக் குடியேறிய மக்கள் அஸ்ஸாமில் கணிசமாக இருக்கின்றன.ஆனால், இவர்களை நாடு கடத்தியே தீர வேண்டும் என்ற கோரிக்கையை இப்போது எழுப்பி, இனக் கலவரங்களுக்கு வழி வகுக்கிறார்கள். படுகொலைப்படலங்கள் தொடங்கிவிட்டன.கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது மேற்கு வங்கத்திலும் மும்பையிலும் பி.ஜே.பி. இதே குரலை எழுப்பியது. பங்களாதேஷிகளை அடையாளம் கண்டு அவர்களை நாடு கடத்த வேண்டும் என்று பி.ஜே.பி. கோரியது. அந்தக் கோரிக்கையை செயல்படுத்த முடியாது என்று மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கூட்டணி அரசு அறிவித்தது. அங்கேயும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பங்களாதேஷிலிருந்து குடியேறிய மக்களின் மூன்றாவது தலைமுறையினர்தான் வாழ்கிறார்கள். இப்படிக் கோரிக்கை எழுப்பும் பி.ஜே.பி., மையத்தில் அமர்ந்து இந்தியாவை ஐந்து ஆண்டுகள் ஆண்டபோது செயல்படுத்தி இருக்கலாம்.
இன்னொரு பக்கம் அமர்நாத் ஆலயப் பிரச்னையை எழுப்பி காஷ்மீரையே கந்தக நெருப்பில் வாட்டிக் கொண்டிருக்கிறது.ஒரிஸாவை பி.ஜே.பி.யின் சங்பரிவார அமைப்புகள்தான் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மாநிலத்தில் 95 சதவிகித மக்கள் இந்துக்கள்தான். இரண்டு சதவிகிதம் கூட இல்லாத கிறிஸ்துவ மக்களால் அந்த பூமிக்கு ஆபத்து வந்திருக்கிறதாம்.இப்போது அந்த மாநிலத்தின் கூட்டணி அரசில் பி.ஜே.பி. அங்கம் பெற்றிருக்கிறது. எனவே, விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற இந்துத்துவா அமைப்புக்கள் முழுச் சுதந்திரத்தோடு செயல்படுகின்றன. எனவே வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தேவாலயங்களைத் தகனம் செய்கிறார்கள். பாதிரிமார்களைப் படுகொலை செய்கிறார்கள். இயேசுவின் திருத்தொண்டை மேற்கொண்டிருக்கும் கன்னிப் பெண்களைக் கற்பழிக்கிறார்கள். இப்படி அவர்கள் இந்து சமயத்திற்குப் பாதுகாப்புத் தேடுகிறார்களாம். முதல்வர் நவீன் பட்நாயக்கால் இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. கானகங்களில் எரியும் நெருப்பில் பி.ஜே.பி. குளிர்காய்ந்து கொண்டிருக்கிறது.நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக முடி சூடிக் கொண்ட பின்னர், எப்படி கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொண்ட ஆதிவாசி மக்கள் படுகொலை செய்யப்பட்டார்களோ, அதே போல் ஒரிஸாவிலும் உயிரோடு எரிக்கப்படுகிறார்கள்.
ஒரு விஸ்வ ஹிந்து சாமியார் வனங்களுக்கு நடுவே ஆஸ்ரமம் அமைத்து, கிறிஸ்துவ ஆதிவாசி மக்களை இந்து மதத்திற்குத் திருப்பும் வேலையைச் செய்து கொண்டிருந்தார். இப்படி இவர்களே கட்டாய மதமாற்றம் செய்வார்கள். ஆனால் தேவாலயங்கள் மதமாற்றம் செய்வதாகக் கூறி, லங்கா தகனம் செய்வார்கள்.அந்தச் சாமியாரை மாவோயிஸ்டுகள் படுகொலை செய்தனர். அதனை அவர்களே பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர். ஆனால் பி.ஜே.பி.யின் சங்பரிவாரங்களால் மாவோயிஸ்டுகளோடு மோதமுடியவில்லை. எனவே மீண்டும் தேவாலயங்களை எரிப்பது _ கிறிஸ்துவ மக்கள் மீது தாக்குதல் தொடுப்பது என்பன போன்ற வன்முறை வெறியாட்டங்களை நடத்துகிறார்கள். மாறுபட்ட மத உணர்வுள்ளவர்கள் என்பதற்காக மனிதர்களைக் கொலை செய்வது அவர்களுடைய குடும்பங்களையே தீயிட்டுக் கொளுத்துவது என்ன நியாயம்? கொலைச் செயல்தான்.அந்த அதர்மம், அக்கிரமம்தான் நியாயம் என்று எந்த இந்து சமுதாயக் கோட்பாடும் சொல்லவில்லை. இன்றைக்கு இன்னும் ஒரிஸாவில் நடைபெறுவது இந்துத்துவா பயங்கரவாதம்! அதனை இன்று வரை மாநில அரசால் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பில்லை. காவல் துறையின் உதவியை நாடினால் அவர்கள் கண்களை மூடிக்கொள்கிறார்கள்.
இதேபோன்று 2002-ம் ஆண்டு இஸ்லாமிய மக்களுக்கு எதிராக குஜராத்தில் அரசு ஆதரவுடன் பயங்கரவாதம் ஏவி விடப்பட்டது. அப்போதும் கண்ணீரும் கம்பலையுமாய் அடைக்கலம் தேடிய மக்களுக்குக் காவல் துறை பாதுகாப்புத் தரவில்லை. கொடூரத் தாக்குதல்களுக்கு ஆளானவர்கள் மீதே வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இப்போது ஒரிஸாவில் அதன் மறுபதிப்பு அரங்கேற்றப்படுகிறது.
இவ்வளவு பெரிய கொடுமை நடைபெறுவது நமது பிரதமருக்கு எப்போது தெரியும்? அவர் அமெரிக்காவில் புஷ் நாமாவளியை முடித்து விட்டு பிரான்சிற்கு வந்தார். அங்குதான் நிருபர்களும் பொது நல அமைப்புக்களும் ஒரிஸா தகனம் செய்யப்படுவதை அவருடைய கவனத்திற்குக் கொண்டு வந்தனர். `அப்படியா? அது கொடுமைதான்' என்றார்.ஆனால், அவர் தாயகம் திரும்பிய பின்னர் என்ன நடவடிக்கை எடுத்தார்? ஒரிஸா அரசை டிஸ்மிஸ் செய்யச் சொல்லி உலகமே குரல் கொடுத்து விட்டது. அதனைச் செய்தாரா? அதனைக் கூட மறந்து விடுவோம். மத்திய புலனாய்வுத் துறையினரை அனுப்பி அங்கு என்னதான் நடைபெறுகிறது என்பதனை அறிந்து அறிக்கை தரச் சொன்னாரா? இல்லை. `மத்திய படையினரும் மாநில காவல்துறையினரும் சேர்ந்து அங்கே அமைதியை நிலைநாட்டுவோம்' என்று சமரசம் பேசுகிறார்.என்ன காரணம்? சங்பரிவாரங்கள் முரட்டுத் தனமான, மூர்க்கத்தனமான இந்துத்துவாவைச் செயல்படுத்துகின்றன. பி.ஜே.பி. அதன் அரசியல் டார்பிடோ படையாகச் செயல்படுகிறது. மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசோ மென்மையான இந்துத்துவா கோட்பாட்டிற்குச் செயல்வடிவம் கொடுக்கிறது.ஆறுமுறை மத்திய அரசு எச்சரித்தும் ஒரிஸா அரசு கலவரத்தை ஒடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை.
குஜராத் கலவரத்தின் போது எப்படி ஓர் இஸ்லாமியச் சகோதரியை பஜ்ரங்தள் பரிவாரங்கள் கூட்டாகக் கற்பழித்தனவோ, அதேபோல ஒரிஸா வனாந்தரங்களின் ஆதிவாசி மக்களுக்கு அரும் சேவை செய்து வந்த ஒரு கிறிஸ்துவ சகோதரியை அதே வானரசேனை கற்பழித்தது. இதனை விட வேறு தேசிய அவமானம் இருக்க முடியுமா?கர்நாடகாவில் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் பரிவாரங்கள் தொடர்ந்து மாதாகோயில்களைத் தாக்கின. மதமாற்றம் நடைபெற்ற இடங்களில்தான் அத்தகைய தாக்குதல்கள் நடைபெற்றதாக முதல்வர் எடியூரப்பாவே பொய் சாட்சி சொன்னார். கடந்த பத்து ஆண்டுகளாக கர்நாடகாவில் எவரும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதில்லை என்று சிறுபான்மை இன ஆணையம் தெரிவித்திருக்கிறது.மதக்கலவரங்களை நடத்தித்தான் தாங்கள் வளர முடியும் என்பதில் நரேந்திர மோடியிலிருந்து எடியூரப்பா வரை உறுதியாக இருக்கிறார்கள். தம்மை மதச் சார்பற்ற சக்தி என்று கூறிக் கொள்ளும் காங்கிரஸ் கட்சிக்கு வகுப்புவாத சக்திகளைச் சந்திப்பதற்கான திட்டமும் இல்லை. துணிச்சலும் இல்லை. அதனால் காஷ்மீர், அஸ்ஸாம், ஒரிஸா, கர்நாடகா என்று நாடு எரிந்து கொண்டிருக்கிறது.
by solai
மக்களுக்கு தொண்டு செய்து, அதன் முலம் மக்களிடையே பிரபலமானவர்களுக்கு, அவர்கள் இறந்தபின், சிலருக்கு அவர்கள் உயிருடன் இருக்கும்போதே அவர்களது உருவத்தை மாலையாக வடித்து, பல இடங்களில் நிறுத்தி மாலையிட்டு மரியாதை செய்து வருவதைப் பார்த்து வருகிறோம்.மாலை மரியாதை என்பது போய் கால ஓட்டத்தில் அக்கற்சிலைகள் தெய்வங்களாக உயர்வு பெற்று விடுகின்றன.
மனிதனின் கால் மிதிபடும் கல் அந்த மனிதனே தெய்வமாக வணங்கும் நிலைக்கு உயர்வதற்கு யார் காரணம்? மனிதனின் அறிவற்ற செயலே இதற்குக் காரணம். தங்களை பெரும் பகுத்தறிவாளர்கள் என கூறிக்கொள்வோரும் இதற்கு விதிவிலக்குப் பெற்றவர்களாக இல்லை.
மிதிக்கும் படியும் கல்லுதான்; வணங்கும் சிலையும் கல்லுதான். கல்லை தெய்வமாக வணங்குகிறவன் காட்டுமிராண்டி என வசை பாடியவர்கள், இன்று தாங்கள் மதிக்கும் தலைவர்களை அதே கல்லைக் கொண்டு சிலைகளாக வடித்து மாலை மரியாதை செய்து வருகிறார்கள். இந்த சிலைகளே சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் தெய்வங்களாக மாறுகின்றன என்ற உண்மையை விளங்காதவர்களாக இருக்கிறார்கள்.
மனிதன், ஆரம்பத்தில் இறந்தவர்களுக்கு மரியாதை செய்யும் நோக்கத்துடன் சமாதி, பின்னர் கற்சிலை வடித்தல் என்று ஆரம்பித்துப் பின்னர் அதுதான் சிலை வணக்கமாக மாறுகிறது என்பதை இறுதி மறை அல்குர்ஆன் 71:23 அம்பலப்படுத்துகிறது.
மனிதர்களாக வாழ்ந்து இறந்தவர்களுக்கு மரியாதை என்ற பெயரால் நிறுவப்படும் கற்சிலைகளே குட்டி, குட்டி தெய்வங்களாக உருவாகி மனிதர்களிடையே பல தெய்வ வழிபாட்டை உருவாக்குகின்றன. தங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கின்றவர்கள் இந்த பொய்க் கடவுள்களை ஒழிப்பதற்கு பதிலாக, இவர்களே மேலும் பொய்க் கடவுள்கள் தோன்ற வழி வகுத்துக்கொண்டு அகில உலகங்களையும் படைத்து நிர்வகித்து வரும் அந்த ஒரேயொரு இறைவனை மறுக்கும் நாஸ்திகர்களாக ஆகிவிடுகிறார்கள்.
இவர்களும் மனிதனின் சீரழிவுக்கு புரோகிதரகளைப் போலவே ஒரு வகையில் காரணமாகிவிடுகிறார்கள்.இந்த சிலைகள் இறைவன் மன்னிக்காத, இறைவனுக்கு இணை வைக்கும் கொடும் செயலை மனித வர்க்கம் பக்தியுடன் செய்ய வைப்பது ஒருபுறம் அச்சிலைகளே மனிதர்களிடையே பெரும் கலவரங்கள் ஏற்படவும் காரணமாகின்றன. ஒரு சமூகத்தாருக்கு பெரும் தலைவராகத் தெரியும் ஒருவர், இன்னொரு சமூகத்தாரின் வெறுப்புக்குக் காரணமாக இருக்கிறார். எனவே ஒரு சமூகத்தாரின் சிலையை பிரிதொரு சமூகத்தார் அவமானப்படுத்தும் நிலையும் அரங்கேறி வருகிறது.அதனால் சிலைகளை பாதுகாக்க அதனைச் சுற்றி கம்பி வேலி போடுகிறார்கள். சிறையில் அடைக்கிறார்கள். தலைவர்களின் சிலைகள் சிறைக் கைதியாகவும் அவர்களின் தலைகள் பரவைகளின் மலக்கூடமாகவும் காட்சி அளிப்பதை பார்க்கிறோம். சிலைகளை சிறையிலிட்டு பாதுகாப்பு அளித்தும், அவற்றை உடைத்து அவமானப்படுத்தும் செயல்களும் நிற்பதாக இல்லை.உத்திர பிரதேசத்தில் அம்பேத்கார் சிலையை யாரோ உடைத்து அவமானப்படுத்தி விட்டார்கள். அதனால் மஹாராஷ்டிராவில் பெருங்கலவரம் ஏற்பட்டு தொடர்வண்டிகள், நூற்றுக்கணக்கான பேருந்துகள், வாகனங்கள் எரிப்பு, உயிர்ச் சேதம் என பல கோடிகள் நாசமாகின.பலருக்கு ஞாபகம் இருக்கலாம்.
தலைவர்களைக் கண்ணியப்படுத்தும் நோக்கத்துடன் மாவட்டங்களுக்கு அத்தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டன. அப்படி ஒரு மாவட்டத்துக்கு ஒரு தலைவரின் பெயர் வைக்கப்போய் அங்கு பெரும் கலவரங்கள் மூண்டன. அரசு அக்கலவரத்தை அடக்க முடியாமல் தவித்தன. இறுதியில் அந்த மாவட்டத்திற்கு அந்தத் தலைவரின் பெயர் வைக்கப்படுவது தவிர்க்கப்பட்டதுடன், ஏற்கனவே பல மாவட்டங்களுக்கு வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டு, பழைய பெயர்களே மீண்டும் வைக்கப்பட்டன.இதே அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இன்னொரு அழகிய முடிவை எடுத்தால், அது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதாக அமையும். அதுவே நாட்டிலுள்ள தலைவர்களின் சிலைகளை அகற்றுவதாகும். அவர்களுக்கு சிலைவடித்து, சிறையிலிட்டு, அவர்களின் தலையை பறவைகளின் மலக்கூடமாக ஆக்குவது உண்மையில் அவர்களுக்கு மரியாதை செய்வதாக ஆகாது.எனவே நாட்டிலுள்ள சிலகளை அகற்றுவது பல தெய்வ வணக்க வழிபாடுகளை ஒழிக்க வழி வகுப்பதோடு, சமூகங்களில் ஏற்படும் சச்சரவுகளால் பெரும் கலவரங்கள் ஏற்பட்டு பல கோடி நஷ்டத்தோடு, பொன்னான மனித உயிர்களும் மாய்க்கப்படுவது தவிர்க்கப்பட வழி ஏற்படும்; சிலை விரும்பிகள் சிந்திப்பார்களா?
இஸ்லாத்தை தவிர எல்லா மதங்களிலும் சாதிகளும் அதனால் சச்சரவுக்களும் ஏற்றத்தாழ்வுகளும் புரையோடிப்போய் காணப்படுகின்றன.ஆனால் சில விவரங்கெட்ட கூழ்முட்டைகள் இஸ்லாத்திலும் சாதிப்ப்ரச்சனைகள் இருப்பதுபோல் பேசுவதும் எழுதுவதும் வாடிக்கையாகிவிட்டது. இதற்க்கு அவர்கள் சில விவரங்கெட்ட விஷயங்களைக் கூறி மக்களை குழப்ப பார்க்கின்றனர்.உதாரணமாக,மரைக்காயர்,லெப்பை,ராவுத்தர் இப்படி முஸ்லிம்கள் பிரயோகிப்பதை வைத்து தவறாக எண்ணி சாதி பேதம் இஸ்லாத்திலும் உண்டு என மாயையை ஏற்படுத்த முயல்கின்றனர்.
ஆனால் அது உண்மை அல்ல என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.உதாரணமாக மரைக்காயர் என்பது வணிகம் செய்து வந்தவர்களை குறிக்கும் ஒரு வழக்காகும்.மடைக்கல ஆயர் என்பது மருவி மரைக்காயர் ஆனது.இதற்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம்?அதே போன்று குதிரை வியாபாரம் செய்து வந்தவர்களை ராவுத்தர் என அழைக்கலாயினர்.இதில் சாதி எங்கே இருக்கிறது?மார்க்க சேவை செய்வோர் லெப்பை என அழைக்கப்படலாயினர்.இதில் சாதி எங்கே உள்ளது.
மரைக்காயரும்,லெப்பை,ராவுத்தரும் ஒரே வரிசையில் நின்று தொழுவதும்,ஒரே தட்டில் உணவருந்துவதும்,சம்பந்தம் செய்து வாழ்க்கை பந்தத்தில் இணைவதும் இதற்க்கு உதாரணம்.
ஆனால்,இந்து மத சாதி பாகுபாடுதான் மக்களை இழிவு படுத்தக்கூடியது.ஆண்டான் அடிமை பேதம் காட்டக் கூடியது.பிராமணன் தலையில் பிறந்தவன்,சூத்திரன் காலில் பிறந்தவன் என சொல்லி அவனை தாழ்ந்தவன் என எட்டி மிதிக்கக் கூடியது. இந்து மத காயத்ரி மந்திரத்தை சூத்திரன் சொன்னால் ,அந்த சூத்திரனின் நாக்கை சூடு போடு,சூத்திரன் பிராமின் உடைய அடிமை என்றெல்லாம் சொல்லி பேதம் காட்டக் கூடியது.
அதே நிலையே கிறிஸ்தவத்திலும்.இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவம் நோக்கி செல்லும் மக்களிடமும் இந்து மதத்தில் என்ன சாதியில் இருந்தார்களோ அதே சாதி பெயர்தான் கிறிஸ்தவம் சென்றாலும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.உதாரணம்,வன்னிய கிறிஸ்தவர்கள்,நாடார் கிறிஸ்தவர்கள்,தலித் கிறிஸ்தவர்கள் என சொல்லிக் கொண்டு போகலாம்.மேலும் சில மாதங்கள் முன்பு நெல்லை,தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் நடந்த கிறிஸ்தவ சாதி சண்டைகளை சொல்லலாம்.
ஆகவே இஸ்லாத்தில் எள்ளளவும் அதன் முனை அளவும் சாதி இல்லை பாகுபாடு இல்லை.அப்படி இருப்பதாக கூப்பாடு போடுபவர்கள் கடைந்தெடுத்த பொய்யையும் கற்பனையையுமே பரப்பி தங்கள் மேலேயே சேரை அள்ளி பூசிக் கொள்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.
அதற்கெல்லாம் அப்பாற்பட்டு உலகளாவிய அளவில் இஸ்லாம் மக்களை அரவணைத்து,படு வேகமாக பரவி வருகிறது என்பதே நிதர்சன உண்மை.
''அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்" என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் ''(அப்படியல்ல)! நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்" என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டொியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?)31:21.