அய்டா வின் (AYDA) (இப்தார்) நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
ஜித்தாவில் அய்டா வின் (AYDA) (இப்தார்) நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கடந்த 3.9.2008 புதன்கிழமை அன்று மாலை ஜித்தா லக்கி தர்பார் ஹோட்டலில் முதன்முறையாக ஜித்தாவில் அய்டாவின் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜித்தா வாழ் அதிரைவாசிகள் அனைவரும் குடும்பத்துடன் திரளாக வந்து கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு அய்டாவின் இணை தலைவர் சகோதரர் முகைதீன் அவர்கள் தலைமை தாங்க சகோதரன் ஆதில் அஹ்மது கிராத் ஓத நிகழ்ச்சி இனிதே துவங்கியது. அய்டாவின் இணை பொருளாளர் சகோதரர் A.ஜபருல்லாஹ் வரவேற்புரை வழங்க பொருளாளர் சகோதரர் அப்துல் அஜீஸ், இணை செயலாளர் சகோதரர் நைனா(அஜ்வா), அய்டாவின் மூத்த ஆலோசகர் சகோதரர் B.பஷீர் அகமது மற்றும் பலர் உரை நிகழ்த்தி ஊர் விஷயங்கள் மற்றும் அய்டாவின் செயல்பாடுகள் பற்றி அளவலாவினர். அய்டாவின் தலைவர் சகோதரர் ரபியா அய்டாவின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் பற்றி சிறப்புரை வழங்கினார். இதுபோன்ற ஊரிலுள்ள நல்ல அமைப்புகள் பற்றி நினைவு கூறும்போது புதிதாய் துவங்கப்பட்டுள்ள 'யுநேடட் பாரம்' பற்றி சகோதரர் சாகுல் ஹமீது (NAFSAL) விளக்கமளித்தார், இதுபற்றி சகோதரர் ஷம்சுதீன் வந்திருந்தவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். இறுதியில் செயலாளர் சகோதரர் A.J. தாஜுதீன் நன்றியுரை வழங்க இரவு உணவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.