


ஒவ்வொரு வருடமும் ஏழைகளை வரிசையில் நிற்க வைத்து, செல்வச் செழிப்பைக் காட்டுவதற்காக வேட்டி என்றும் சேலை என்றும் ஜகாத் வழங்கியும் நமதூரில் ஏழ்மை ஒழிந்தபாடில்லை. இஸ்லாத்தின் நான்காம் கடமையான தை கூட்டாக, நமதூர் மக்களின் சேவைகளில் கடந்த 15 வருடங்களாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள, அதிரைவாசிகளுக்கு நன்கு பரிச்சயமான வெளிப்படையான அமைப்பான அதிரை பைத்துல்மாலின் ஜகாத் விநியோக முறையைச் சொல்லும் கட்டுரையை அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் அனைவரது சார்பில் தங்களுக்கு புனித ரமளான் வாழ்த்துக்கள். ரமளான் மாத்த்தில் அடைந்துகொள்ள வேண்டிய பேறுகளை தாங்களும், தங்களது குடும்பத்தினர் அனைவரும் அடைந்து கொள்ள அல்லாஹ்விடம் நெஞ்சார துஆ செய்கிறோம்.
அதிரை பைத்துல்மாலின் மக்கள் நலத் திட்டங்களில் முதன்மையானது ஜகாத் நிதி வசூலும், பங்கீடுமாகும். இறைமறைக் கட்டளைக்கு ஏற்ப 8 வகையான நபர்களுக்கு, தகுதிக்கு ஏற்ப மொத்தமாக வழங்கப்படுகிறது. இது தவிர ஏழ்மை, வறுமை, இயலாமை, வருமானமின்மை, பிணி, மூப்பு போன்றவைகளால் அவதியுறுபவர்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் நேரடி விசாரணையின் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்டு மாத உதவித்தொகையாக ரூ 250 வீதம் 58 பேருக்கு வழங்கப்படுகிறது.
ஜகாத் நிதி வேறெந்த திட்டத்திற்கும் பயன்படுத்தப்படுவதில்லை. முழுக்க முழுக்க ஏழை, எளிய மக்களின் உதவிக்காகத்தான் பயன்படுத்தப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறோம். வறுமையிலும், ஏழ்மையிலும் வாடும் மக்களுக்கு உரிய உதவியை உரிய நேரத்தில் வழங்குவதற்கு ஜகாத் நிதியைத் தவிர வேறெந்த நிதி ஆதாரமும் அதிரைபைத்துல்மாலிடம் இல்லை. தாங்கள் வழங்கும் ஜகாத், ஸதக்கா, நேர்ச்சை, உதவிகள் தான் நிதி ஆதாரமாக உள்ளது.
எனவே, தாங்கள் மனமுவந்து கணிசமான அளவில் ஜகாத் நிதியை வழங்கி ஆதரவு நல்கிட அன்புடன் வேண்டுகிறோம். தங்களது உதவிக்கு பன்மடங்கு நன்மையை இம்மையிலும், மறுமையிலும் தங்களுக்கு வழங்கிட அல்லாஹ்விடம் நெஞ்சார துஆ செய்கிறோம்.
வஸ்ஸலாம்,
தங்கள் நலம் நாடும்,
பேரா. S. பரக்கத், M.A.,M.Phil, M.Ed.,PGDTE.,
தலைவர்
A. முனாப், B.A, B.L.,
செயலர்