இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்குர்ஆன் 3:103
குர்ஆன் வசனங்களையும் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழியினையும் சமுதாய மக்கள் இன்று சிந்தித்து செயல்பட முன்வரவேண்டும். இன்றைய இஸ்லாமிய சமுதாயம் பல பிரிவுகளாக பிரிந்து பல தலைவர்களின் பின்னால் அணி அணியாக நிற்பதை காணமுடிகிறது. அந்த தலைவர்கள் எதைச் சொன்னாலும் அது சரி என முடிவெடுக்கின்ற நிலையில்தான் இருக்கின்றனர். அது சரியா? தவறா? என்றெல்லாம் சிந்தித்தும் பார்ப்பதில்லை.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
நிச்சயமாக உங்களிடையே சில தலைவர்கள் தோன்றுவார்கள்; அவர்களிடம் நல்லவற்றையும் காண்பீர்கள், தீயவற்றையும் காண்பீர்கள். யார் அவர்களின் தவறுகளை கண்டிக்கிறாரோ, அவர் தமது பொறுப்பிலிருந்து நீங்கிவிட்டார். யார் அவர்களை வெறுக்கிறாரோ அவர் பாதுகாப்பு பெற்றார். யார் அவர்களது தீய செயல்களைப் பொருந்தி துணை செய்கிறாரோ அவர் நாசமடைந்தார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடன் சஹாபாக்கள் அவர்களிடம் கேட்டார்கள்; அல்லாஹ்வின் தூதரே! அவர்களுடன் போர் செய்யலாமா? என்று கேட்கப்பட்டதற்கு "அதற்கு அவர்கள் தொழுகையை நிறைவேற்றும்வரை போர் செய்யக்கூடாது" என்று கூறினார்கள். அறிவிப்பாவர்: உம்முஸமா(ரழி) நூல்: திர்மிதி, அஹ்மத்
வழி கெடுக்கும் தலைவர்களைப் பற்றியே என் சமுதாயம் குறித்து நான் அஞ்சுகிறேன். என் சமுதாயத்தில் ஒரு கூட்டத்தினர் தான் சத்தியத்தில் உறுதியுடன் இருப்பார்கள். அறிவிப்பவர்: ஸவ்பான்(ரழி) நூல்: திர்மிதி
நபி(ஸல்) அறிவிப்புப்படி "ஒரு கூட்டத்தினர் தான் சத்தியத்தில் உறுதியுடன் இருப்பார்கள் என அறிய முடிகிறது. அந்த சத்தியத்தை நாம் மக்களிடம் எடுத்து வைக்கவேண்டிய கடமை முஸ்லிம்கள் அனைவருக்கும் உண்டு. ஆனால் அல்லாஹ் கூறியபடி, நபி(ஸல்) அவர்கள் அறிவித்த சத்தியத்தை எடுத்து வைப்பதில் ஒற்றுமையாகவோ, உறுதியாகவோ இருப்பதற்கு முன்வருவதும் இல்லை.
ஏன் இந்த நிலை என்பதை சிந்த்திக்கவேண்டும். நம்மிடம் ஒற்றுமை இல்லாததால் பிற சமுதாயத்தினர் நம்மை எளிதில் வென்றுவிட முடிகிறது.
நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம். அல்குர்ஆன் 2:143
(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிாிவை உண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்;. அத்ததையோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அல்குர்ஆன் 3:105
இத்தைகைய வசனங்கள் பிரிவை ஏற்படுத்திக்கொள்ளாமல் ஒன்று பட்ட சமுதாயமாகவே இருக்க வேண்டும் என்பதையே தான் வலியுறுத்துகின்றன. ஆதலால்தான் அல்லாஹ் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. 3:103 என்று தனது திருமறையை பற்றிப்பிடிக்க கூறுகிறான். இங்கு அல்குர்ஆனை அல்லாஹ் கயிற்றுக்கு உவமானமாகக் கூறுவதின் நோக்கம் பல தனித்தனி நார்களாக இருந்ததைத்தான் ஒன்றினைத்து கயிறாக உருமாற்றுகிறோம் என்பதை நமக்கு எளிதான உரை நடையில் உணார்த்துகிறான்.
"ஜமாஅத்தை பற்றிக்கொள்ளுங்கள்; பிரிந்து செல்வதை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன்; எவர் சொர்க்கத்தின் நறுமணத்தை நுகர விரும்புகிறாரோ அவர் ஜமாஅத்தை அவசியமாக்கிக்கொள்ளட்டும்" இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உமர்(ரழி) அறிவிக்கிறார்கள். நூல்: திர்மிதி
ஜமாஅத்தின் (கூட்டமைப்பின்) அவசியத்தை நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளதை மேற்காணும் ஹதீஸ்கள் மூலம் அறியமுடிகிறது. மேலும் கூட்டமைப்புகள் செயல்படும் முறைக்கு உதாரணமாக பல ஊர்களில் ஜமாஅத் கட்டுப்பாடு என்று அமைத்து பல காரியங்களை ஒற்றுமையுடன் செயல்படுத்தி வருகிறார்கள். இதுபோ, நாடு முழுவதும் ஒரே ஜமாஅத்தை முன்னிலைப்படுத்தி ஒரே கருத்தான குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் செயல்படுத்திட முன்வரலாம். பிரிந்து இருக்கும் பல அமைப்புகளை ஒன்றுபட அழைக்க முயற்சிக்க வேண்டும். ஆட்சி அதிகாரம் இருந்தால்தான் ஒரே அமைப்பாக செயல்பட முடியும், ஒரே அமீரின் கீழ் செயல்பட முடியும் என்று கூறுவது சரியல்ல.
ஒன்றுபட்டால் ஆட்சி அதிகாரம் நம்மைத்தேடி நிச்சயம் வரும் என்று நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். அல்லாஹ் நாடினால் நிச்சயம் நடக்கும். இதை விடுத்து பல குழுக்களாக செயல்படலாம் என முடிவெடுத்து செயல்பட நினைப்பவர்கள் திருமறையின் 3:103, 3:105 வசனங்களுக்கு அவர்களே பதில் கூறட்டும்!
மண்டபம் M.அப்துல் காதிர்
மிக சிறந்த சீர்திருத்தக்கட்டுரை "பராஅத் இரவும் பித்அத்களும்". இந்த கட்டுரை படித்தவுடன் பின்னூட்டம் எழுத ஆரம்பித்தேன், ஆனால் அது ஒரு ஆக்கம் எழுதும் அளவிற்கு என்னை இழுத்து சென்றது நம்மூரை பற்றி நினைத்தவுடன்.
ஒரு விசயம் மட்டும் எனக்கு புரிந்துக்கொள்ளவே முடியவில்லை. நம்மூரில் மரைக்காப்பள்ளிக்கு ஒரு மார்க்க சட்டம் பிற பள்ளிகளுக்கு ஒரு மார்க்க சட்டமா?. மவ்லிது, பராஅத் இரவில் யாசீன் ஓதுதல், போன்ற பித்-அத்துகள் ஒரு போதும் மரைக்காப்பள்ளியில் நடந்ததும் கிடையாது, நடத்தவும் முடியாது.
முக்கியமான மார்க்க ஆலோசனை கூட்டமெல்லாம்(மசூரா) மரைக்காயர் பள்ளியிலேயே நடைபெற்று வருகிறது என்பது நமக்கெல்லாம் தெரியும். மார்க்க கூட்டத்தில் நம்ம ஊரில் உள்ள உலமா பெருமக்கள், அனைத்துப்பள்ளி இமாம்கள் மற்றும் இளம் மவ்லவிகள் பங்கேற்கின்றன. பித்-அத்துக்கள், மூட பழக்க வழக்கங்கள் போன்றவைகளை களைவதற்கு மசூராவில் இதுவரைக்கும் பேசபட்டுள்ளதா? இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுள்ளதா? அப்படியே பேசி முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் மசூராவில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்த பள்ளி இமாம்கள் முன் வரவில்லையா? அல்லது செயல்படுத்த மறுக்கிறார்களா?
மற்ற பள்ளிகளில் மட்டும் மவ்லிது போன்ற பித்-அத்துக்கள் இன்றும் நடைப்பெற்று வருகிறதே இதற்கு யார் காரணம்?
பள்ளியின் இமாமா?
பள்ளியின் நிர்வாகமா? அல்லது
முஹல்லாவாசிகளா?
யாராக இருந்தாலும் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியே ஆகவேண்டும். மிக சிறந்த ஆலிம்களையும், துடிப்புள்ள இளம் மவ்லவிகளையெல்லாம் அதிரை அதிகமாக பெற்றிருந்தும் நம்மால் இது போன்ற மார்க்கத்திற்கு புறம்பான காரியங்களை விட்டும் மக்களை தடுக்க முடியவில்லை என்பது வேதனைக்குரிய விசயம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'மனிதர்களில் மிகவும் கெட்டவன், இரண்டு முகம் கொண்டவன். இவர்களிடம் செல்லும் போது ஒரு முகத்துடனும், அவர்களிடம் செல்லும் போது வேறு முகத்துடனும் செல்கிறான்'. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 5076, புகாரி 7179.
எங்க ஊரில் அதிகமான ஆலிம்கள், அதிகமான ஹாபிழ்கள், அதிகமான மத்ரஸாக்கள் என்று பெருமையடித்தால் மட்டும் போதுமா?
மார்க்க விசயத்தில் அருகாமையில் உள்ள ஊர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய நாமே இப்படி பித்-அத்துக்கள், மவ்லிது, ஹத்தம் பாத்திஹா, கந்தூரி போன்ற அனாச்சாரங்களில் மூழ்கிக்கிடப்பது வெட்கப்பட வேண்டிய விசயம்.
மார்க்க சீர்த்திருத்தவாதிகள் நிறைந்து இருக்கும் நம்மூரில் இது போன்ற பித்அத்துக்கள் அரங்கேருவதற்கு யார் காரணம்?
பித்-அத்துக்களுக்கு எதிராக மசூராவில் முடிவுகள் எடுக்கப்படுகின்றதா? இல்லையா?
மசூராவில் எடுக்கப்படுகின்ற முடிவுகள் மரைக்காயர் பள்ளி முஹல்லாவிற்கு மட்டும்தானா?
மசூராவில் எடுக்கப்படுகின்ற முடிவுகளை மற்ற முஹல்லாகளுக்கு தெரியபடுத்தாமல் மறைக்கப்படுகின்றனவா?
இது போன்ற கேள்விகளே அதிரை மக்களின் நீண்ட நாள் விடை தெரியாத வினாக்கள்.
-அப்துல் பரக்கத்.